Search This Blog

Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

Monday, February 13, 2012

மயக்கம் என்ன?!?!



யாருமற்ற நடுமுற்றத்தில்
அவசரமாய் நானறியாமல்
கன்னத்தில் நீ பதிக்கும் கள்ளத்தனங்களால்
வெட்கச்சிதறல் தனை மறைக்க
விரல் நகம் உடைக்க முற்படுகிறேன் நான் !!
சட்டென திரும்பி ஒன்றுமறியா வாக்கில்
சிரித்தபடி செல்லும் உன் சகஜங்களில்
எனக்கான காதலை காட்டிச்செல்கிறாய் நீ !!
இத்தனை நாளாய் சிரமமான பிராயத்தனங்களால்
மறைத்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த - என்
வெட்கம் வெளிக்கொணர்ந்த கோபத்தில்
என் இயலாமை மறைக்க
தடுமாற்றமில்லாதது போல் நடிப்பதாய் நினைத்து
பின்னாலிருந்து உன் சட்டை பிடித்திழுத்து
உனக்கான காதலை அவிழ்க்கிறேன் நான் !!
இருக்கும் இடைவெளியில்
உன் வெப்பம் ஈர்த்து
உயிர் வாழும் என் குளிர் மூச்சுக்காற்று !!
இரவை முடித்து வைத்து
இன்றை தொடக்கி வைத்து
நாள் முழுதுக்குமான பரிவர்த்தனைகளில்
நான் கொஞ்சங்கூட அறியாமல்
நிதர்சனமாய் நிறைந்திருக்கிறாய் நீ !!
எதிலும் உன்னை நினைவூட்டும்
நானறியா என் இயல்பு !!
என்னை பறைசாற்றும் அனைத்தும்
உன் சாயலிலேயே தோன்றி
பதுக்கி வைக்கப்படுகிறது எனக்குள் !!
இன்று வரையும் இறுதி வரையும்
என்னை இழுத்து பிடித்து
உன் பிடிக்குள் வைத்திருக்கிறது மாயக்காதல் !!




Saturday, July 09, 2011

காதலிக்கிறீங்களா, இத பாருங்க ;)

கடலை காதல் கல்யாணம்
என்றனைத்தும்
மோனையில் கூட கனவுகளோடு
முழுதாய் ஆமோதிக்க
விரக்தியை மட்டுமே
விடையாய் தரும்
வாழ்க்கையின் நிஜங்கள் ! ! !

Friday, July 08, 2011

மௌனங்கள் கூட ஒலிக்கும்

திரும்பி ஒருமுறை பார்க்க இயலாமல்
நீ நகர்ந்து செல்லும் நேரங்களில்
பிரிவின் ரணம் தாங்க மாட்டாமல்
உனதன்பை மனம் உணரும் தருணங்களில்
முதல் முத்த ஸ்பரிசங்களால்
நகராமல் நின்ற இரவுப்பொழுது
மனதை மழுங்கச் செய்துவிடுகிறது. . .
உயிரின் வீரியம் காற்றில் கரைந்து
தொடரும் முற்று புள்ளி நிலவுகளாய்
விழி நீர்துளியாய் தெறித்து நிற்க
காத்திருப்பின்  கனம்  கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை மெதுவாய் உணர்வாய் நீ ! ! !
காத்திருப்பின் கனம் கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை  மெதுவாய்  உணர்வாய் நீ ! ! !

பிரதானமாய் காற்று

உன்  காதல்
அழைத்து  செல்லும்  பாதையில்
அவ்வப்போது  காணாமல்  நான்  போக
எதிர் காற்றில்
தலைகவிழும்  குடை போல
தாங்க  மாட்டாமல்
மயங்குகிறது  மனது...
அணைத்துக்  கொள்ள ஆளில்லாமல்
காதலால் நீ கரைய
கொட்டி தீர்க்க வழியில்லாமல்
மெல்ல மெல்ல - என்
காதலின்  வீரியம்   உறைய
அங்கிங்கெனாதபடி
எங்கும்   நிறைந்திருக்கும்    காற்றில்
பிரதானமாய்  கலக்கும்   நம்  காதல் ! ! !