மின்சாரமில்லா மழை நேர இரவில்
மௌனங்கள் ஓங்கி ஒலித்துகொண்டிருக்க
அரவமில்லா இருட்டில்
மரணங்களின் சாயப் பூச்சு
மங்கலாய் அலறிகொண்டிருக்கும்..
காற்றில் அலையும் ஆன்மாக்களோ , ஆவிகளோ
அழைக்கும் சத்தம் கேட்குமென
வாய் பொத்தி மூச்சடக்கி காத்திருப்பான்
மனித உலகம் வெறுத்த ஒருவன் !!!
No comments:
Post a Comment