நண்பர்களில்லாத கல்லூரிப் பேருந்து பயணமென்பது
நடு சாம மழை போல
இருட்டின் இன்னல்களுக்கு அப்பாற்பட்ட இன்பமது !!!
அப்படி ஓர் நாள்
தன்னந்தனியாய் பின்னிருக்கையில் அமர்ந்து
விலாசமில்லா பேருந்துப் பிரஜைகளை
ஆராய முற்பட்டதின் விளைவிது !!
- ஓர் மொக்க கவிதை
ஒவ்வோர் இருக்கையின் ஆக்ரமிப்புகள் பின்வருமாறு :
நண்பனோடு அளவளாவிக் கொண்டு
குழந்தைபோல் சிரிக்கும் ரெட் ஷர்ட் ஜுனியர்..
க்யூட் என சொல்லும் மனசு,
எதிர் இருக்கையில் அவன் சைட் அடிக்கும் பெண்ணைப் பார்த்ததும்
சட்டென சறுக்கும் ;)
தனியாய் சிரிக்கும் ஒருத்தி..
பேருந்து கம்பியில் தலைசாய்த்து உறங்கும் ஒருவன்..
கைபேசி குறுஞ்செய்தி உலகத்தின்
அனிச்சை சந்தோஷத்தில் லயித்து இருக்கும் ஒருவனும் ஒருத்தியும் ..
சுற்றுமுற்றும் நடப்பது அறியாமல் - காதில்
இசையோடு பயணிக்கும் ஒருவன் ..
மூன்று பேராய் கூடி
நான்காவதாய் ஓர் காதல்ஜோடியைப் பற்றி
புரணிப் பேசும் பக்கத்து இருக்கை பெண்கள் ..
காலியாய் பல இடம் இருந்தும்
அரசல் புரசல் மற்றும் அலப்பறைகளோடு
இருவர் இருக்கையில்
நால்வராய் பயணிக்கும்
இளமைப் பட்டாள இனிமைகள் ..
முன்பின் இருக்கைகளில் அமர்ந்து
கடலை போடும் சில மொக்கபீஸ்கள் ..
மறுநாள் இண்டெர்னல் தேர்வுக்கான
ஆயத்தம் தொடங்கும் அதிமேதாவி ..
தப்பிக்க வழியின்றி
கண்டக்டரிடம் கதை பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி ..
இத்தனைக்கும் நடுவில் - என்றும்
கூட பயணிக்கும் குரங்குக் கூட்டம் இன்றில்லாமல் போக
கல்லூரி பேருந்தின்
அன்றாட பயணம் கூட அந்நியமாகி நிற்க
நெடுந்தூரம் தாண்டி வந்தபின்
புதிதாய் முளைத்த வேகத்தடையில்
பேருந்து துள்ளிக் குதிக்க
முன்னிருந்த கம்பியில் முட்டி
தடுமாறி நான் விழ
அனைவரும் திரும்பி பார்த்து சிரித்ததில்
அன்றைய கவிதை மற்றும் பேருந்தின்
கதாநாயகி ஆகிப் போனேன் நான் !!!
நடு சாம மழை போல
இருட்டின் இன்னல்களுக்கு அப்பாற்பட்ட இன்பமது !!!
அப்படி ஓர் நாள்
தன்னந்தனியாய் பின்னிருக்கையில் அமர்ந்து
விலாசமில்லா பேருந்துப் பிரஜைகளை
ஆராய முற்பட்டதின் விளைவிது !!
- ஓர் மொக்க கவிதை
ஒவ்வோர் இருக்கையின் ஆக்ரமிப்புகள் பின்வருமாறு :
நண்பனோடு அளவளாவிக் கொண்டு
குழந்தைபோல் சிரிக்கும் ரெட் ஷர்ட் ஜுனியர்..
க்யூட் என சொல்லும் மனசு,
எதிர் இருக்கையில் அவன் சைட் அடிக்கும் பெண்ணைப் பார்த்ததும்
சட்டென சறுக்கும் ;)
தனியாய் சிரிக்கும் ஒருத்தி..
பேருந்து கம்பியில் தலைசாய்த்து உறங்கும் ஒருவன்..
கைபேசி குறுஞ்செய்தி உலகத்தின்
அனிச்சை சந்தோஷத்தில் லயித்து இருக்கும் ஒருவனும் ஒருத்தியும் ..
சுற்றுமுற்றும் நடப்பது அறியாமல் - காதில்
இசையோடு பயணிக்கும் ஒருவன் ..
மூன்று பேராய் கூடி
நான்காவதாய் ஓர் காதல்ஜோடியைப் பற்றி
புரணிப் பேசும் பக்கத்து இருக்கை பெண்கள் ..
காலியாய் பல இடம் இருந்தும்
அரசல் புரசல் மற்றும் அலப்பறைகளோடு
இருவர் இருக்கையில்
நால்வராய் பயணிக்கும்
இளமைப் பட்டாள இனிமைகள் ..
முன்பின் இருக்கைகளில் அமர்ந்து
கடலை போடும் சில மொக்கபீஸ்கள் ..
மறுநாள் இண்டெர்னல் தேர்வுக்கான
ஆயத்தம் தொடங்கும் அதிமேதாவி ..
தப்பிக்க வழியின்றி
கண்டக்டரிடம் கதை பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி ..
இத்தனைக்கும் நடுவில் - என்றும்
கூட பயணிக்கும் குரங்குக் கூட்டம் இன்றில்லாமல் போக
கல்லூரி பேருந்தின்
அன்றாட பயணம் கூட அந்நியமாகி நிற்க
நெடுந்தூரம் தாண்டி வந்தபின்
புதிதாய் முளைத்த வேகத்தடையில்
பேருந்து துள்ளிக் குதிக்க
முன்னிருந்த கம்பியில் முட்டி
தடுமாறி நான் விழ
அனைவரும் திரும்பி பார்த்து சிரித்ததில்
அன்றைய கவிதை மற்றும் பேருந்தின்
கதாநாயகி ஆகிப் போனேன் நான் !!!
nyc da!!!
ReplyDeletethanks vidhya :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHey superb uma....kalakita po...
ReplyDeletethanks anish :)
ReplyDeletehai uma i am also from nager coil but now i am in bangalore.. i read your kavithi its good. yena panarthku sela neram mathvangla santhosa padthuvathu sela poi solla venathya tha eruku.>>>>>>>.......my ph no 09590960132
ReplyDelete@nishanth : thanks for visiting and your comment :) ya, konja fiction add panni irken inda poem la :p
ReplyDeleteகல்லூரி அழைத்து சென்றது உங்கள் வரிகள்
ReplyDeleteReally nice...keep writing.
ReplyDelete