Search This Blog

Wednesday, March 30, 2011

kai kollakaadhal

நிராகரிப்பின் நிதர்சனங்களை
உணரும் சமயங்களில் கூட
உன் காதலை எண்ணி
என்னை மறுதலிக்கும் என் மனது!!!

kavithaiyum kaadhalum

கவிதையைப் பொழியுமுன்
வார்த்தைகள்  அனைத்தும் 
கவிதை  என்கிறாய்  நீ!!
வார்த்தைகளில்  வழியும்  கவிதையே 
காதல் என்கிறேன் நான் !!
மொத்தத்தில் 
கவிதையும்   காதலும் 
என்   ஏட்டினில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது !!! 

Friday, March 25, 2011

kanavu karaisal

நிறமற்ற கவலைகளுக்கு
கவிதை சாயம் பூசுகையில்
வெறுமனே வெறித்துக்கொண்டிருக்கும் 
நடுசாம வேளைகளோடு
கனவுகள் பின்னிகொள்ள
கற்றுணர்ந்த நிகழ்வுகளை
வெள்ளையாய் ஓர் விட்டுகொடுத்தலில்
கேட்பாரற்ற மகிழ்ச்சி  பகிர்தலில்
எதிர்பார்ப்பில்லா ஆச்சர்யங்களில்
மனம் கரையும் அதிர்வுகளில்
உண்மையாய் உணரும்போது
கனவுகள் ரொம்பவும் பிடித்து போகிறது
கவிதைகளை விடவும் !!!

minsaaramilla iravu

மின்சாரமில்லா மழை நேர இரவில்
மௌனங்கள் ஓங்கி ஒலித்துகொண்டிருக்க
அரவமில்லா இருட்டில்
மரணங்களின் சாயப் பூச்சு
மங்கலாய் அலறிகொண்டிருக்கும்..
காற்றில் அலையும் ஆன்மாக்களோ , ஆவிகளோ 
அழைக்கும் சத்தம் கேட்குமென
 வாய் பொத்தி மூச்சடக்கி காத்திருப்பான் 
மனித உலகம் வெறுத்த ஒருவன் !!! 

kavithaiyum kaadhalum

kavithaiyum kaadhalum
epporul nokkinum
neeyendre amaivathin
artham ariyaamal
thavikiren naan!!!