Search This Blog

Friday, July 08, 2011

மரணமில்லா உலகம் வேண்டும்

மரணத்தின் விழுதுகளை
மௌனம் மட்டுமே
ஆழமாய் கவ்விக்கொண்டிருக்கிறது..
மறுஜனனம் வேண்டி நிற்கும் வேளையில்
நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல
இறைவனின் இருப்பையே
கேள்வி குறியாக்கும்
உயிர் குதறும் பிரிவின் ரணம்..
உறவுகள் நிரந்தரமாய் நீங்கி செல்கையில்
நீத்தார் இல்ல உலகில்
நிதர்சன வாழ்க்கை நாம் வாழ
இழப்புகள் ஏற்றுகொள்ளும் திராணியற்ற எங்களுக்காக
மரணம் அழிக்கும் சூனியங்கள் தேவை !!!

No comments:

Post a Comment